என்னுடைய சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம்6) ஆன கீழ்க்கண்ட பதிவில்
ஈரலை இப்படிக் கொடுத்தால் கண் எப்படி சரியாகும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படுவது போல் எனக்கும் ஏற்பட்டது.அதற்கு அக்கு பஞ்சர் விடை அளித்தது.
அக்குபஞ்சர் தத்துவத்தில் ஈரல் கண்களில் திறக்கிறது(LIVER OPENS IN EYE) என்பார்கள்.ஒரு சோடா புட்டி கண்ணாடி அணிந்திருக்கிறார் என்றால் அவர் ஈரல் பழுதுள்ள மனிதர் என்று பொருள்(LIVER MAN).ஈரலை சரி செய்தால் கண் சரியாகத் தெரியும்.
அதை விட்டு விட்டு அல்லோபதி மருத்துவம் கண்ணில் லேசர் போன்றவற்றால் பொசுக்கி (கண்ணில் நின்று இயங்கி வரும் பிராணனை கெடுத்து உயிரை நாசம் செய்கிறது.இதன் விளைவால் கண் தெரிந்தாலும் உயிரின் ஆயுள் குறையும்.)
இப்போது புரிகிறதா கண் சரியாக தெரியவில்லை என்றால் ஈரலில் இருக்கிறது குறைபாடு.சித்த வைத்தியத்தில் 'ஊனுக்கு ஊன்' என்ற சித்தாந்தம் உண்டு.எந்த உறுப்பு மனிதனுக்கு பழுதாகி இருக்கிறதோ அந்த உறுப்பையே வேறு மிருகத்தில் இருந்து(ஏற்றது வெள்ளாடு,நாட்டுக் கோழி) மூலிகைகளின் மூலம் பக்குவம் செய்து கொடுக்க அந்த உறுப்பின் குறைபாடு நீங்கும்.அதன் விளைவாக அந்த பேறுறுப்பின்(ORGAN) பாதுகாப்பில் உள்ள உறுப்புக்களின் குறைபாடுகளும் நீங்கும்.
அக்கு பஞ்சரில் இந்தக் குறைபாட்டிற்கு கால் பெருவிரல் நகக் கண்ணில் உள்ள மண்ணீரல்1,கல்லீரல்1(SPLEEN1,LIVER1) புள்ளிகளில் சிகிச்சை அளிக்க மண்ணீரலும்,கல்லீரலும் பலப்பட்டு நோய் நீங்குகிறது.
மேலும் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு கால் பெருவிரலில் எந்தக் காயமும் அடியும் படாமலே பெருவிரலில் புண் உண்டாவதும்,பெருவிரல் அழுகுவதும் கால் பெருவிரல் நகக் கண்ணில் உள்ள மண்ணீரல்1,கல்லீரல்1(SPLEEN1,LIVER1) புள்ளிகள் உயிரோட்டம் அற்றுப் போவதேயாகும்.
இதை அல்லோபதி மருத்துவம் கால் பெருவிரல் இதயத்தில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதால்தான் கால் பெருவிரல் இரத்தம் கிடைக்காமல் புண் வருகிறது என்று கற்றுத் தருகிறது.அதையே அல்லோபதி மருத்துவர்களும் சொல்லி வருகிறார்கள்.
புண் வந்து எந்த அல்லோபதி மருந்துக்கும் கட்டுப்படாதபோது,(ஏனெனில் அல்லோபதி மருந்துகள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உபயோகித்துத்தான் குணப்படுத்தும்.அதற்கென தனியாக எந்த குணப்படுத்தும் சக்தியும் கிடையாது)கால் பெருவிரலை வெட்டி எடுப்பதோ,காலையே வெட்டி எடுப்பதோ நடக்கும்.பாவம் சர்க்கரை நோயாளர்கள்.
சர்க்கரை நோயாளர்களுக்கு புண்,மற்றும் புரை வரும்போது மத்தன் தைலம் என்ற தைலம்,TAMPCOL,IMPCOPS போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் தரமான மருந்து.இதை வெளிப் பிரயோகமாக பிரயோகித்து புண்ணை ஆற்றிக் கொள்ளலாம்.
அல்லோபதி மருத்துவத்தில் உபயோகிக்கும் மருந்துகளில் பல ANTI-BIOTIC.அதாவது உயிர்ச் சக்திக்கு எதிரானது என்று பொருள். அப்படி உயிர்ச் சக்திக்கு எதிரானதை தலைவலி,காய்ச்சல்,உடல்வலி(நமது உயிர்ச்சக்தி கிளர்ந்து எழுவதே இவை) போன்றவற்றிற்கு உபயோகித்து,நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளை சேதாரம் ஆக்கி பல பெரிய வியாதிகளை வலுவில் வாங்கிக் கொள்கிறோம்.
ஆமாம் நான் கேட்கிறேன் இத்தனை நாளும் அதே தூரத்தில் இருந்த கால் பெருவிரல் நகம் சர்க்கரை நோய் வந்தவுடன் இதயத்தில் இருந்து மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரம், அதிகம் ஆகிவிட்டதா!சர்க்கரை நோய் வருவதற்கு முன்னாலும் பின்னாலும் தூரம் மாறாதபோது எப்படி இந்த விஷயம்(LOGIC)சரியாக இருக்க முடியும்.
இப்படி முட்டாள்தனமான கோட்பாடுகளைக் கொண்ட அல்லோபதி வைத்தியத்தை மக்கள் பின்பற்றி அதன் பக்க விளைவுகளையும்,பின் விளைவுகளையும் பார்க்க பார்க்க கண்களில் இரத்தக் கண்ணீர்தான் வருகிறது.'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்' என்ற பாரதியாரின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
புண் வந்து எந்த அல்லோபதி மருந்துக்கும் கட்டுப்படாதபோது,(ஏனெனில் அல்லோபதி மருந்துகள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உபயோகித்துத்தான் குணப்படுத்தும்.அதற்கென தனியாக எந்த குணப்படுத்தும் சக்தியும் கிடையாது)கால் பெருவிரலை வெட்டி எடுப்பதோ,காலையே வெட்டி எடுப்பதோ நடக்கும்.பாவம் சர்க்கரை நோயாளர்கள்.
சர்க்கரை நோயாளர்களுக்கு புண்,மற்றும் புரை வரும்போது மத்தன் தைலம் என்ற தைலம்,TAMPCOL,IMPCOPS போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் தரமான மருந்து.இதை வெளிப் பிரயோகமாக பிரயோகித்து புண்ணை ஆற்றிக் கொள்ளலாம்.
அல்லோபதி மருத்துவத்தில் உபயோகிக்கும் மருந்துகளில் பல ANTI-BIOTIC.அதாவது உயிர்ச் சக்திக்கு எதிரானது என்று பொருள். அப்படி உயிர்ச் சக்திக்கு எதிரானதை தலைவலி,காய்ச்சல்,உடல்வலி(நமது உயிர்ச்சக்தி கிளர்ந்து எழுவதே இவை) போன்றவற்றிற்கு உபயோகித்து,நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளை சேதாரம் ஆக்கி பல பெரிய வியாதிகளை வலுவில் வாங்கிக் கொள்கிறோம்.
மண்ணீரல் மற்றும் கல்லீரல்(SPLEEN,LIVER), பூச்சி மருந்தடித்த,உரம் போட்ட உணவுகளை உண்பதாலும், அல்லோபதி மருந்துகளை உண்பதாலும் சீரழிகிறது.அதுவே இந்த உறுப்புகளின் சக்திப் பாதையில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக PARACETAMOL என்பது PARA- ACETO-AMINO-PHENYL ஆகும்.அதன் பக்க விளைவுகள் மற்றும் பின் விளைவுகளைக் கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்.
அப்போ அல்லோபதி மருந்துகள் சாப்பிடாவிட்டால் எப்படி வியாதிகளை குணப்படுத்திக் கொள்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.பதிவுகளைப் பாருங்கள்,அனைத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பதில்கள் கொடுத்து வருகிறேன்.பயன் பெறுங்கள்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்